மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 December, 2020 9:21 PM IST
Credit : Dinamalar

மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்:

தமிழக அரசின் சிறப்புத் திட்டமான உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் (Farmer Officer Contact Program), மதுரை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் முன்னோடி விவசாயிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு, உதவி வேளாண் அலுவலர்களால் சாகுபடி (Cultivation) தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி, செயல் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

விவசாயிகளுக்கு ஆலோசனை:

உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் வகையில், அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் உதவி இயக்குநர்கள் தலைமையில், வேளாண் விஞ்ஞானிகள் (Agricultural Scientists), வேளாண் அலுவலர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் வேளாண் உதவி அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சென்று, விவசாயிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை (Technical tutorials) வழங்குவர். இதேபோல், வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள் மாதம் ஒருமுறை சென்று ஆலோசனைகளை வழங்குவர். இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேளாண் இணை இயக்குநர் த. விவேகானந்தன் (Vivekanandan) தெரிவித்துள்ளார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு உதவ விஜய் ரசிகர்கள் எடுத்த அசத்தலான முடிவு - பொதுமக்கள் வரவேற்பு!

English Summary: Farmer Officer Contact Scheme in Madurai! Call for farmers to benefit!
Published on: 01 December 2020, 09:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now