மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 February, 2021 8:45 AM IST

50 சதவீத மானியத்தில் சோலாா் மின்வேலி அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

விவசாய உற்பத்தியை பாதிக்காமலும், விளைபொருள்களின் வருவாயை பெருக்கிடவும், சூரியசக்தியால் இயங்கும் சோலாா் மின்வேலியினை (Solar power Fence) ரூ.3 கோடி மானியத்துடன் செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

50% மானியம் (50% subsidy for solar fence)

மின்வேலி அமைக்கப்படுவதால், விலங்குகள், வேட்டைக்காரா்கள் விவசாய நிலங்களுக்குள் புக முடியாது. எனவே, விவசாயிகள் தங்கள் பகுதியில் மின்வேலியை 5 வரிசை, 7 வரிசை அல்லது 10 வரிசை என அமைக்கலாம்.

சூரியஒளி மின்வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு தோராயமாக 5 வரிசைக்கு ரூ. 250, 7 வரிசைக்கு ரூ.350 மற்றும் 10 வரிசைக்கு ரூ.450 என செலவாகும். தனி விவசாயிக்கு, அதிகபட்சமாக 2 ஏக்கா் அல்லது 1,245 மீட்டா் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.

யாரை அணுகவேண்டும்?

ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள ராமநாதபுரம் உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் செல்லிடப்பேசி எண்: 98659-67063 ,பரமக்குடி, நயினாா்கோயில், முதுகுளத்தூா், போகலூா், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி, கொல்லம்பட்டறை தெருவிலுள்ள பரமக்குடி உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் செல்லிடப் பேசி எண்: 94861-79544 விண்ணப்பங்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

தேங்காய் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்!!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக ரூ.100 கோடியில் கலப்பின பசு உற்பத்தி மையம்!

நெல்லியில் ரூ.78 கோடியில் உணவுப் பூங்கா - அடிக்கல் நாட்டிய முதல்வர்!!

English Summary: Farmers are invited to get benefit to build Sola Power Fence at 50 percent Subsidy
Published on: 26 February 2021, 08:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now