மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 November, 2019 9:43 AM IST

தமிழக விவசாயிகள் உரங்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும், நிலையான மற்றும் வெளிப்படையான விலை பட்டியலை கூற வேண்டும் என வேளாண் துறை செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக யூரியா உள்ளிட்ட, பல்வேறு வகையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகள் மூலமாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பருவ மழை பெய்ததை தொடர்ந்து தற்போது, தமிழகம்  முழுவதும், நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. இவற்றிற்கு தேவையான உரங் களை வேளாண் துறையினர் மத்திய அரசிடமிருந்து பெற்று மாநிலங்களுக்கு விநியோகிக்கின்றனர். இம்முறை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள உரங்கள் இதுவரை வேளாண் துறையினரை வந்தடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

உரங்களின் தேவை அதிகரித்திருப்பத்தை ஒரு சில தனியார் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களில் உள்ள அதிகாரிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  உரங்களை நிர்ணயத்தை விலையை விட அதிகமாக விற்கிறார்கள் என விவசாயிகள் கூறுகின்றனர்.  45 கிலோ எடையுள்ள யூரியா மூட்டை, 267க்கு பதிலாக, ரூ.310க்கும், 950க்கு விற்பனையான பொட்டாஷ், ரூ.1,000 க்கும் , 1,390க்கு விற்பனையான டி.ஏ.பி., ரூ.1,450க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள்  தெரிவித்துள்ளனர்.

அரசின் உத்தரவு படி உரம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் உரங்களின் விலை, அவற்றின் கைஇருப்பு , போன்ற தகவல்களை கடைகளுக்கு வெளியே எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அதை எவரும் பின்பற்றுவதில்லை.  எனவே, உரங்களின் விலையை கட்டுப்படுத்த, வேளாண் துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Farmers are Request to display the rates and stock details of Fertilizer and Uriya
Published on: 06 November 2019, 05:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now