மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 May, 2021 8:12 PM IST
Credit : Commodity port

விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பனை செய்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை தொலைபேசி மூலம் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை மூலம் காய்கறிகள் விற்பனை

இது குறித்து வேலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை அதிகரித்து வருவதை தடுக்க, மே 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி வகைகள், பழ வகைகள் தோட்டக்கலைத்துறை மூலமாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தோட்டக்கலை துறையை தொலைபேசி மூலம் அணுகலாம்

எனவே, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களான காய்கறி மற்றும் பழ வகைகளை மாவட்டத்துக்கு உள்ளேயும், பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம்.

அதன்படி, தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் (வேலூர்) - 97867-31939, (காட்பாடி)- 70101-08291, (கே.வி.குப்பம்) - 87782-76335, (பேரணாம்பட்டு) - 98434-30656, (குடியாத்தம்)- 88381-50845, (அணைக்கட்டு) - 96006-23790, (கணியம்பாடி)-95856-85259 ஆகிய தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தயங்காமல் தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க....

வேளாண் இயந்திரங்களை வாடகையின்றி இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!

மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!

English Summary: Farmers can approach the Horticulture Department to sell their agricultural products
Published on: 25 May 2021, 07:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now