News

Friday, 25 October 2019 11:30 AM

பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடதிற்கு ரூ.6,000 உதவித் தொகையை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என மத்திய வேளாண் துறை அறிவித்திருந்தது. இதுவரை இந்த திட்டத்தில் 14.5 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதற்கென 2019-2020 நிதி ஆண்டில் ரூ.87 ஆயிரம் கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் தொடங்கப் பட்ட இந்த திட்டத்தில், தமிழகத்திலிருந்து 34 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 25 லட்சம் பேருக்கு, இரண்டு தவணை உதவித் தொகை வழங்கப்பட்ட நிலையில், மூன்றாவது தவணை வழங்குவதற்கான பணி நடந்து வருகிறது.

தற்போது இத்திட்டத்தில் விடுபட்டுள்ள அல்லது இணைய விரும்பும் விவசாயிகளை சேர்ப்பதற்கு, வேளாண் துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக  சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. விடுபட்ட விவசாயிகள், அரசின் இ - சேவை மையம் அல்லது பிரதமரின் உதவித்தொகை திட்டத்திற்கான இணையதளம் மூலமாக   முன்பதிவு செய்யலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

https://tamil.krishijagran.com/news/centre-starts-registration-for-pradhan-mantri-kisan-maan-dhan-yojana-pm-kmy/

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)