மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 February, 2021 10:59 AM IST

கரும்பு பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று நாமக்கல் ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

கரும்புக்கு சொட்டு நீர் பாசனம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர், பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் (PMKSY) 2020-21-ம் ஆண்டிற்கான பொருள் இலக்காக 4800 ஹெக்டேர், நிதி இலக்காக ரூ.26.69 கோடி பெறப்பட்டுள்ளது. இதில் இதுவரை 5668 ஹெக்டேர் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரும்பு பயிர் பரப்பினை அதிகரிக்கும் நோக்கில், கரும்பு பயிருக்கு சொட்டுநீர்பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது, அதிகபட்சமாக ரூ.49,000 வரை மானியம் அதிகமாக வழங்கப்படும் என்றார்.

பயிர் இழப்பீடு

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு டிசம்பர் வரை 3,270,13 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். இதில், பயிர் இழப்பீட்டுத் தொகையாக ரூ.153.72 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.95 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

உழவர் உற்பத்தியாளர் குழுக்கள்

கூட்டு சாகுபடியை விவசாயி களிடையே ஊக்குவிப்பதற்காக,கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் 40 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு வேளாண் இயந்திரக் கருவிகளை வாங்குவதற்காக, அரசு ரூ.5 லட்சம் தொகுப்பு நிதியினை வழங்கியுள்ளது. இக்குழுக்கள் அனைத்தும் தொகுப்பு நிதியினை பயன்படுத்தி தங்கள் பகுதிக்குத் தேவையான பண்ணை இயந்திரங்களை கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குளிர்பதன கிடங்குகள்

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் 6 உழவர் சந்தைகளில், நாளொன்றுக்கு சராசரியாக 454 விவசாயிகள் 69 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் என ரூ.21.89 லட்சம் மதிப்புள்ள விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். நாமகிரிப்பேட்டை, பரமத்தி வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சேமிக்க தலா 25 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள குளிர்பதன கிடங்குகள் பயன்பாட்டில் உள்ளன என ஆட்சிர் மெகராஜ் தெரிவித்தார்.

மேலும் படிக்க..

மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா நெல் ஆராய்ச்சிகளுக்கு ஒப்பந்தம்! வேளாண் பல்கலை துணைவேந்தர் தகவல்!

மேட்டூர் உபரி நீரை சரபங்கா வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் - முதல்வர் பழனிசாமி துவக்கிவைப்பு!!

கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பெற்ற கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு!!

English Summary: Farmers can get More subsidy to Grow sugarcane under drip irrigation system Says Namakkal Collector
Published on: 27 February 2021, 10:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now