மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 March, 2021 2:40 PM IST


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வேளாண் சட்ட நகல்களை எரித்து ஹோலி பண்டிகையை கொண்டாட வருகின்றனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் கடந்த 120 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் நேற்று புதிய வடிவத்தை எட்டியது.

சட்ட நகல் எரிப்பு

அதன்படி, டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களின் தீயிட்டு எரித்தனர்.
வழக்கமாக ஹோலி பண்டிகையின் போது தேவையில்லாதவற்றை தீமூட்டி எரிப்பது வழக்கம் அந்தவகையில் நாட்டுக்கு தேவையில்லாதது இந்த புதிய வேளாண் சட்டகள் ஏற்று குறிப்பிடும் வகையில் விவசாயிகள் இந்த சட்ட நகல் எரிப்பு போராட்டத்தை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து தனி சட்டம் இயற்றப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உணவு கழகங்கள் முற்றுகை

இதேதொடர்ந்து வரும் ஏப்ரல் 5ம் தேதி நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் அலுவலகங்களை காலை 11 முதல் மாலை 5 மணி வரை முற்றுகையிடுவதாகவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா எனும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

English Summary: Farmers celebrate Holi by burning copies of agricultural laws !!
Published on: 29 March 2021, 02:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now