News

Thursday, 22 July 2021 06:04 PM , by: R. Balakrishnan

Credit : Dinamalar

மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட (Agri Laws) திருத்தங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லியில் கடந்த பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீண்டும் போராட்டம்

கோவிட் (Covid) பெருந்தொற்றால், போராட்டம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்புவுதால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். டில்லி சிங்குர் எல்லையில் இருந்து ஜந்தர் மந்தருக்கு தங்களது போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர்.

தீவிர பாதுகாப்பு

டில்லியில் நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் அனுமதி கோரினர். ஆனால், 'கோவிட் பரவல் ஏற்படும்' எனக் கூறி போலீசார் மறுத்தனர். இதையடுத்து டில்லி சிங்குர் எல்லையில் இருந்து டில்லி ஜந்தர் மந்தருக்கு போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர். அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேருந்துகளில் ஜந்தர் மந்தர் வந்து சேர்ந்தனர். பிகேஎஸ் விவசாய சங்கத் தலைவர் திகைத் தலைமையில் ஜந்தர் மந்தரில் அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க

விவசாய நிதி உதவி திட்டம்: தமிழகத்தில் மட்டும் 7.22 லட்சம் போலிகள் பயன்!

திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு: கர்நாடக அரசு அசத்தல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)