மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 May, 2021 10:09 PM IST
Credit : Daily Thandhi

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 20 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் நடக்காததால் மழையில் நனைந்து நெல் முளைத்து வருவதாக விவசாயிகள் புகார் (Complaint) கூறியுள்ளனர். மேலூர் அருகே செட்டியார்பட்டியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் விவசாயிகள் கொண்டு வந்த 4000 சிப்பத்துக்கும் மேலான நெல்மணிகள் தேக்கம் அடைந்துள்ளன.

விவசாயிகள் வேதனை

தற்போது மேலூர் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நெல்மணிகள் முளைக்க தொடங்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். இதுதொடர்பாக கொள்முதல் நிலைய அலுவலர் நந்தினியிடம் கேட்டபோது, விவசாயிகளிடம் போதிய அளவு கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும் தற்போது அறுவடை (Harvest) செய்யப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உதவ வேண்டும்

போதுமான அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டாலும், மீதமிருக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அரசு தயக்கும் காட்டக் கூடாது. அவ்வாறு தயக்கம் காட்டுவதால் தான், இன்று மதுரையில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணாகும் நிலையில் உள்ளது. இந்நிலையில், காலதாமதமின்றி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.

மேலும் படிக்க

தரமற்ற விதைகளால், நஷ்டத்திற்கு உள்ளான விவசாயிகள்! இழப்பீடு வேண்டி கோரிக்கை!

10 ஆண்டுகளுக்கு பின் வாழை சாகுபடியில் விவசாயிகள்!

English Summary: Farmers complaint that paddy has not been procured in Madurai for a long time!
Published on: 08 May 2021, 10:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now