News

Tuesday, 25 October 2022 12:40 PM , by: Elavarse Sivakumar

தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல்

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளை காங்கிரஸ் கட்சி தற்போதே ஆரம்பித்து விட்டது.

ஓய்வூதியத் திட்டம்

இதன் ஒரு பகுதியாக, சட்டர்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்நாத் இவ்வாறு கூறினார்.காங்கிரஸ் கட்சி 2023ம் ஆண்டு, மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்த அவர், அவ்வாறு ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

முயற்சி

தனது ஆட்சிக்காலத்தில், விவசாயிகளின் கடனுக்கான வட்டிச்சுமைய நீக்கவும், பயிர்க்கடன்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த முடிவை, பிஜேபி அரசு மூடு விழா கண்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)