மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 October, 2020 11:59 AM IST
Credit : Dinakaran

கதிர் அடிக்கும் களங்கள் (Rice fields) இல்லாததால் விவசாயிகள், விவசாய பொருட்களை சாலையில் உலர வைக்கின்றனர். இதனால், மாமல்லபுரம் (Mahabalipuram) சுற்று வட்டார கிராம விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விவசாயமே முதன்மைத் தொழில்:

செங்கல்பட்டு மாவட்டம் முழுக்க, முழுக்க விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டுள்ளது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். மழை பொய்த்து ஏரிகள் வறண்டாலும் கிணறு, ஆழ்துளை கிணற்று பாசனம் (Deep well irrigation) மூலம் விவசாயப் பணிகளை ஆண்டுதோறும் தொடர்ந்து செய்கின்றனர். இதையொட்டி, மாமல்லபுரம் அடுத்த எச்சூர், குழிப்பாந்தண்டலம், நந்திமா நகர், காரணை, நல்லான்பிள்ளை பெற்றாள், கடம்பாடி, எடையூர், வடகடம்பாடி உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் நெற்பயிர், வேர்க்கடலை, கேழ்வரகு, எள், உளுந்து, கரும்பு, தர்பூசணி சாகுபடி (Cultivation) அதிகளவில் நடக்கிறது.

விவசாயிகள் கோரிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல கிராமங்களில் கதிர் அடிக்கும் களம் இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர். சில கிராமப் பகுதிகளில் களம் அமைக்கப்பட்டு இருந்தாலும் அவை முறையாக பராமரிக்காததால், சிதிலமடைந்து மோசமான நிலையில் கிடக்கிறது. இதனால் எள், உளுந்து, கேழ்வரகு உள்பட பல்வேறு பயிர்களை கதிர் அடிக்க களம் இல்லாமல் விவசாயிகள், சாலைகளிலேயே (Road) கொட்டி உலர வைக்கும் களமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் எச்சூர், குழிப்பாந்தண்டலம், நந்திமாநகர் உள்ளிட்ட பல இடங்களில் நெல், கேழ்வரகு உள்பட பயிறு வகைகளை சாலைகளில் கொட்டி உலர வைக்கும் காட்சியை ஆண்டு தோறும் பார்க்க முடிகிறது. மேலும், சாலைகளை கதிரடிக்கும் களமாக பயன்படுத்துவதால் இருசக்கர வாகனம், கார் மற்றும் கனரக வாகன விபத்து (Accident) அடிக்கடி நடக்கிறது. அதில், விவசாயிகள் உள்பட பலரும் படுகாயமடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, தமிழக அரசு, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக களம் வசதி இல்லாத கிராமங்களில் கதிர் அடிக்கும் களம் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

புதுச்சேரியில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கு மானியம் வழங்கிட நாராயணசாமி ஒப்புதல்!

பள்ளிகளில் மதிய உணவில் தேன், காளான்! மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரை!

English Summary: Farmers drying agricultural produce on the road due to lack of rice fields!
Published on: 22 October 2020, 11:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now