மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 February, 2021 6:55 PM IST
Credit : Dinamani

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை (Agri bills) எதிர்த்து தலைநகர் டெல்லியில் (Delhi), விவசாயிகள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், விவசாயிகள் அடுத்த கட்டப் போராட்டமாக இன்று (பிப்ரவரி 18), நான்கு மணி நேரம் நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தை (Rail Stir Fight) நடத்தினர்.

இரயில் மறியல் போராட்டம்:

நாட்டின் பல மாநிலங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum support price) முறையை உறுதி செய்யவும், நவம்பர் 26 முதல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று நண்பகல் முதல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இரயில் மறியல் போராட்டத்தையொட்டி முக்கிய இரயில் நிலையங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே காவல் துறையினர் (Railway Police) குவிக்கப்பட்டுள்ளனர்.

அரியானாவின் (Haryana) பால்வால் ரயில் நிலையத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அங்குப் பாதுகாப்புக்காகக் காவல் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மறியலையொட்டி ரயில்கள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

பீகாரில் (Bihar) பாட்னா ரயில் நிலையத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜன அதிகாரக் கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

காஷ்மீரில் (Kashmir), ஜம்மு ரயில் நிலையத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் நடைபெற்றது. தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி முழக்கமிட்டனர். இதேபோல் பஞ்சாபிலும் உத்தரப் பிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஜாக்பாட்! முதலீட்டு மானியம் 3 மடங்காக அதிகரிப்பு!

பயிர் செழிப்பிற்கு புத்துயிர்ப் பெறும், பாரம்பரிய ஏர்க் கலப்பை உழவு முறை!

English Summary: Farmers gather on the tracks in protest of the rail strike!
Published on: 18 February 2021, 06:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now