News

Thursday, 04 March 2021 08:08 PM , by: KJ Staff

Credit : Daily Thandhi

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பட்டு, லக்கிநாயக்கன்பட்டு, மூலக்காடு, மல்லாபுரம், ஆணைமடுவு, புளியங்கொட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் சொட்டு நீர் பாசனம் (Drip irrigation) மூலம் மஞ்சள் (Turmeric) பயிரிட்டு பராமரித்து வந்தனர். தற்போது பயிர்கள் விளைந்ததை அடுத்து மஞ்சளை அறுவடை (Harvest) செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறைந்த விலைக்கு கொள்முதல்:

பெரும் செலவு செய்து மஞ்சள் பயிரிட்டு பராமரித்து வந்தோம். தற்போது அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இருப்பினும் எங்கள் பகுதியில் மஞ்சள் தொழிற்சாலை (Turmeric factory) அமைக்கப்படாத காரணத்தால், அறுவடை செய்யப்பட்ட மஞ்சளை வெளியூர் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிள்ளது. அவர்கள் வாகன போக்குவரத்து செலவை கூறி எங்களது மஞ்சளை குறைந்து விலைக்கு கொள்முதல் (Purchase) செய்து வருகின்றனர்.

நஷ்டம்

தற்போது 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை மஞ்சள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இந்த விலை எங்களுக்கு போதுமானதாக இல்லை. ஏற்கனவே மழையால் பயிர்கள் (Crops) சேதமானதால் மஞ்சள் விளைச்சல் குறைந்துள்ளது. இந்த நிலையில் விலையும் குறைந்துள்ளதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் நாங்கள் பெரும் கவலை அடைந்துள்ளோம். ரூ.15 ஆயிரம் வரை மஞ்சள் விற்பனையானால் மட்டுமே எங்களுக்கு ஒரளவுக்கு வருமானம் (Income) கிடைக்கும் என்று விவசாயிகள் வருத்தத்தோடு தெரிவித்தனர். அதிக மழையால் பயிர்கள் சேதமடைந்த நிலையில், தற்போது விற்பனை விலையும் குறைந்துள்ளதால் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பயிர்களில் மகசூலை அதிகரிக்க களை மேலாண்மை அவசியம்!

காப்பீட்டு விதியில் திருத்தம்! காப்பீடு தொடர்பான புகார்களை இனி ஆன்லைனில் தெரிவிக்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)