மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 November, 2020 9:45 PM IST
Credit : Dinakaran

விவசாயிகள், தற்காலத்தில் அதிகளவு பூக்களை (Flowers) விவசாயம் செய்து வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ள கிராமங்களில் கோழிக்கொண்டை பூ விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் செலவும் அதிகம் தேவைப்படாத நிலையில் பராமரிப்பு செலவும் (Maintenance cost) இல்லை என்பதால் கோழிக்கொண்டை பூ விவசாயத்தை அதிகம் விரும்புகின்றனர்.

கோழிக்கொண்டை பூ விவசாயம்:

அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராமசாமி கூறுகையில், கடம்பன்குளம் கிராமத்தில் வசித்து வரும் நான் 2 ஏக்கர் நிலத்தில் கோழிக்கொண்டை பூ விவசாயம் செய்து வருகிறேன். நான் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் (Tamilnadu Transportation) பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் எனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கோழிக்கொண்டை பூ விவசாயம் செய்து வருகிறேன். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் பூக்கள் நல்ல முறையில் பூத்து வருகிறது. ஒரு ஏக்கருக்கு 40 கிலோ பூ கிடைக்கிறது. விருதுநகர் மார்க்கெட்டில் கோழிக்கொண்டை பூ 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. நல்ல விளைச்சல் இருக்கும் பூவினால் லாபம் (Profit) ஈட்டி வருகிறோம், என்றார்.

பூக்கள் விலை உயர்வு:

நடப்பாண்டில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளியின் போது, பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக, பூக்கள் விவசாயத்தில், அதிக ஆர்வத்தோடு விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

English Summary: Farmers interested in Cockscomb flower farming
Published on: 24 November 2020, 09:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now