News

Wednesday, 03 August 2022 09:46 AM , by: R. Balakrishnan

Farmers losing lands to build airport

பரந்தூர் பகுதியில் 2-வது விமான நிலையம் அமைய உள்ள நிலையில், இதற்காக நிலங்களை இழக்கும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன.

விவசாயிகள் வாழ்வாதாரம் (Farmers Livelihood)

நிலங்கள் கையகப்படுத்தும்போது பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள வளத்தூர், மடப்புரம், நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம், அக்கம்மாபுரம் உட்பட பல கிராமங்களில் இருந்து நிலங்கள் எடுக்கப்பட உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பலர் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். மேலும் பலர் கால்நடை வளர்ப்பவர்கள். நிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டி இருக்கும். மேலும் மேய்கால் புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்பட இருப்பதால் கால்நடைகளும் அதனை வளர்ப்போரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் நிலம் கையகப்படுத்தும்போது இவர்களுக்கான வாழ்வாதாரத்தை மனதில் வைத்து மாற்று தொழில் ஏற்பாடுகளும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி விவசாயத்தை நம்பியுள்ள விவசாய தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

3 மடங்கு இழப்பீடு (3 times compensation)

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறியதாவது: விமான நிலையம் அமைக்க பரந்தூர் பகுதி இறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளின் நிலங்களை எடுக்கும்போது நில எடுப்புச் சட்டத்தின்படி விவசாயிகளின் ஒப்புதலை பெற்று அவர்களின் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். காவல்துறையை வைத்துக் கொண்டு மிரட்டக் கூடாது. அவர்களுக்கு 3 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் மட்டுமின்றி பாதிக்கப்படும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு மாற்றுத் தொழிலுக்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாகக் கூறி ஏழைகளின் வீடுகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த விமான நிலையத்துக்காக 5 கிராம ஏரிகள் முழுவதுமாக கையப்படுத்தப்பட உள்ளன. இதனால் ஏற்படும் பாதகங்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன பதிலை கூறப்போகின்றனர் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க

அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி: புதுவித தீர்வுடன் விற்பனையாளர்கள்!

சிங்கார சென்னையின் உணவுத் திருவிழா 2022: ஆக்ஸ்ட் 12இல் தொடக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)