மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 March, 2021 6:29 PM IST

கும்பகோணம் பகுதியில் உள்ள விவசாயிகள் கோடை சாகுபடிக்காக (Summer cultivation) நிலத்தை தயார்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோடை உழவின் அவசியத்தை வேளாண் துறை தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகள் அதற்கான பணிகளைத் தொடங்கி விட்டனர்.

கோடை சாகுபடி

கும்பகோணம் பகுதியில் சம்பா தாளடி அறுவடை (Harvest) முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மின் மோட்டார் பம்பு வசதி உள்ள விவசாயிகள் தங்களது சாகுபடி நிலத்தில் தண்ணீர் நிரப்பி டிராக்டர் (Tractor) மூலம் நிலத்தை உழுது கோடை சாகுபடிக்காக தங்களது நிலங்களை தயார் படுத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நாற்றங்கால் அமைத்து விதை தெளித்துள்ள விவசாயிகள் விதை நாற்றுகள் வளர்வதற்குள் நிலங்களை நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் தயார் படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் கூறியது

கடந்த சம்பா தாளடி சாகுபடியின் போது அபரிமிதமான மழையால் தேவைக்கு அதிகமான தண்ணீர் விவசாயிகளுக்கு கிடைத்தது. ஆனால் மிதமிஞ்சிய தண்ணீரால் பெருவாரியான விவசாயிகள் பெரும் இழப்பை (Loss) சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடந்த சாகுபடியில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் தற்போது கோடை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் கோடை நடவுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் வெப்பம் அதிகமாக நிலவி வருகிறது. இருப்பினும் மின் மோட்டார் (Electric motor) வசதி உள்ள விவசாயிகள் தற்போது சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளோம். கடந்த சில தினங்களாக நிலவிய கடும் வெப்பத்தால் சாகுபடி நிலங்கள் இறுகி போய் உள்ளது.

நடவு பணி

நிலங்களை இலகுவாக்க ஏற்ற வகையில் தற்போது மின் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து டிராக்டரை கொண்டு உழுது நிலங்களை சமப்படுத்தி வருகிறோம். தொடர்ந்து நாற்றங்காலில் வளர்ந்துள்ள நாற்றுகளைப் பறித்து நடவு பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இந்த கோடை சாகுபடி (Summer cultivation) ஓரளவு கடந்த சாகுபடியில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வேளாண்மை சார்ந்த தொழில்கள் பற்றி அறிவோம்!

மாடுகளின் வாயுத் தொல்லையை தீர்க்க எளிய மருந்து!

English Summary: Farmers preparing land for summer farming!
Published on: 26 March 2021, 06:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now