மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 July, 2021 7:09 PM IST
Credit : Dinamalar

ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் ஜூன் மாதம் குறுவை சாகுபடி பணிகள் தொடங்குவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் நடைபெறும் சாகுபடி (Cultivation) பணிகளுக்காக கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

உழவுப் பணி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள வயல்களில் உழவு பணிகள் நிறைவடைந்து, நெல் விதைகளை விவசாயிகள் தெளித்து வருகின்றனர். தெளிக்கப்பட்ட விதைகள் முளைத்து வளருவதற்கு அப்பகுதி விவசாயிகள் ஆற்று தண்ணீரை விட மழை நீரையே அதிகம் எதிர்பார்க்கிறார்கள். மழைநீர் (Rain water) மூலமாக தெளிக்கப்பட்ட விதைகள் எளிதாக செழித்து வளரும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

மழை பெய்யுமா?

இந்த நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால் நெல் விதைகள் முளைத்து வளருவதற்கு ஏற்றவாறு மழை பெய்யவில்லை. மேலும், ஆற்றில் வரும் தண்ணீர் பாசன வாய்க்கால் மூலம் கொண்டு செல்ல முடியவில்லை என்பதும் விவசாயிகளின் வேதனையாக உள்ளது. குறுவை விதைகள் தப்பிக்க மழை பெய்யுமா? என்பது பெரும்பாலான விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க

121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!

English Summary: Farmers sowing seeds for kuruvai cultivation and waiting for rain
Published on: 07 July 2021, 07:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now