மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 January, 2021 8:20 PM IST
Credit : Daily Thandhi

மக்காச்சோள கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே திரண்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கரும்பு (Sugarcane) மற்றும் நெற்கதிர்களை ஏந்தியவாறு ஊர்வலமாக புறப்பட்டனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:

விவசாயிகளின் ஊர்வலம், நீதிமன்ற சாலையில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகம் முன் மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அனைத்து தாலுகாவிலும் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அம்மையப்பன், தென்னை விவசாயம் மாவட்ட செயலாளர் முத்தையா, நகர செயலாளர் முருகேசன் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மக்காச்சோள கொள்முதல் நிலையம்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் நேரடி நெல் (Paddy) கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மக்காச்சோளம் (Maize) கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து, கடந்த 2 வருடங்களாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை வட்டியுடன் வசூல் செய்து தர வேண்டும். பிரதமரின் விவசாய நிதி திட்டத்தை ரூ. 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தென்னை விவசாயத்திற்கு காப்பீடு (Insurance) திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா கூறினார்.

போராட்டத்தின் முடிவில் விவசாய சங்கம் சார்பில் வேளாண்மை அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கிராம மக்கள் ஒன்று கூடி 2,000 மரக்கன்றுகள் நடவு! மற்ற கிராமங்களுக்கு முன்னோடி!

பசு சாணத்தில் காதி இயற்கை டிஸ்டம்பர், எமல்ஷன் பெயிண்ட்! நாளை அறிமுகப்படுத்துகிறார் நிதின் கட்கரி

English Summary: Farmers urge to open maize procurement center!
Published on: 12 January 2021, 08:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now