15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 15 April, 2021 8:46 AM IST
Traditional Cultivation
Credit : Dinamalar

தமிழ் புத்தாண்டான நேற்று, பாரம்பரிய முறைப்படி வயல்களில் நல்லேர் பூட்டி, விவசாயிகள் சாகுபடி (Cultivation) பணியை துவக்கினர். காவிரி பாசன டெல்டா மாவட்டங்களில், ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில், விவசாயம் தழைத்தோங்க வேண்டி, விவசாயிகள் நல்லேர் பூட்டி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில், விவசாயிகள் நல்லேர் பூட்டி வழிபாடு நடத்தினர்.

நல்லேர் பூட்டி வழிபாடு

காலப்போக்கில், விவசாயம் பொய்த்து போனதாலும், இயந்திரமயம், கால்நடை வளர்ப்பு குறைவு போன்ற காரணங்களால், நல்லேர் பூட்டும் நிகழ்வும் குறைந்து போனது. இருப்பினும், ஒரு சில கிராமங்களில் நல்லேர் பூட்டுவது தொடர்ந்து வருகிறது. நேற்று, தஞ்சாவூர் அடுத்த, ஆச்சம்பட்டி கிராமத்தில், விவசாயிகள், கிராம மக்கள், கோவில் முன், ஏர் கலப்பை, உழவு மாடு, விதைகளை வைத்து பூஜை செய்தனர்.

பாரம்பரிய முறை

பின், ஊர்வலமாக சென்று, வயல்களில், பழங்கள் (Fruits), அரிசி, விதை நெல், நவதானியம் வைத்து, சூரிய பகவானை (Sun) வழிபட்டனர். தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி, ஏர் கலப்பையால் வயலை உழுது, விதை நெல் தூவி, சாகுபடி பணிகளை துவக்கினர். விவசாயிகள் கூறும்போது, 'மன்னர்கள் காலத்தில், தங்க ஏர் கலப்பையால் நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி நடந்து வந்த நிலையில், தற்போது, மர ஏர் கலப்பை பூட்டி நடந்து வருகிறது. வரும் தலைமுறையினர், பாரம்பரியத்தை தொடர வேண்டும்' என்று விவசாயிகள் கூறினர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இலாபகரமாக மாட்டுப்பண்ணையை வழிநடத்த சில டிப்ஸ்!

தமிழக மக்களுக்கு, தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

English Summary: Farmers who traditionally worshiped Naller in Tamil New Year!
Published on: 15 April 2021, 08:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now