News

Monday, 07 March 2022 06:59 PM , by: R. Balakrishnan

Cotton cultivation

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகள், கண்மாய்கள், ஊருணிகள் ஆகியவற்றில் தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் 8 ஆண்டுகளுக்கு பிறகு பருத்தி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.

பருத்தி சாகுபடி (Cotton Cultivation)

வெம்பக்கோட்டை, வல்லம்பட்டி, சங்கரபாண்டியபுரம், ஏழாயிரம்பண்ணை, கீழச்செல்லையாபுரம், ஊத்துப்பட்டி, கங்கரகோட்டை, கோவில் செல்லையாபுரம், மார்க்க நாதபுரம், மேலசத்திரம், ரெட்டியாபட்டி, நதிகுடி, செவல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி (Cotton Cultivation) செய்துள்ளனர்.

விலை உயர்வு (Price Raised)

இதுகுறித்து கீழ செல்லையாபுரம் விவசாயி சுந்தரமூர்த்தி கூறியதாவது:-
நீர் நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பதாலும், குளிர்ச்சியான தட்பவெப்பநிலை இருப்பதாலும் பருத்தியை சாகுபடி செய்துள்ளோம். கடந்த முறை அறுவடையின் போது காய்ந்த பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 9,500 விலை கிடைத்தது.

மேலும் பருத்திக்கு அதிக அளவு ஆர்டர் இருப்பதால் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் உயர வாய்ப்பு இருப்பதால் 8 ஆண்டுக்கு பிறகு மீண்டும் பருத்தி சாகுபடி செய்துள்ளோம்.

மேலும் படிக்க

உவர்நிலத்தை வளமான விளைநிலமாக்கும் அதிசய செடி!

PM Kisan: மோசடிகளை தவிர்க்க அதிரடி நடவடிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)