சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 11 February, 2022 4:03 PM IST
Father DMK, - Son BJP, Daughter Independent - Beating Election Comedy!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தி.மு.க.,வில் நடக்கும் கேலிக்கூத்துகள், அரசியல் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி, அப்பகுதி மக்கள் மத்தியிலும் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தாங்கள் சார்ந்துள்ளக் கட்சி சார்பில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை என்றால், விரக்தியடையும் சிலர், அந்தக் கட்சிக்கு எதிராகவும், சுயேட்சையாகப் போட்டியிடுவது வழக்கம். அந்த வகையில், சூளேஸ்வரன்பட்டி
பேரூராட்சியில் சீட் கிடைக்காத தி.மு.க., பிரதிநிதிகள் 5 பேர், கட்சி கட்டுப்பாடுகளை மதிக்காமல், அவர்களோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

மனுத்தாக்கல்

வார்டு, 3ல் தி.மு.க.., பிரதிநிதி கமாலுதீன் மனைவி பவுஜியா பேகம்; வார்டு, 4ல், முகமது பிலால்; வார்டு, 6ல், கமாலுதீன், வார்டு, 8ல் வார்டு நிர்வாகி முகமது ஜமேஷ் சேட் மனைவி மெஹர்பானு, வார்டு, 15ல், தி.மு.க., கட்சி நிர்வாகி முருகேசன் மனைவி சங்கீதாஆகியோர், தி.மு.க.,வில்'சீட்' கிடைக்காததால், அதிருப்தியை வெளிப்படுத்த சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

அது மட்டுமின்றி, தி.மு.க., ஓட்டை பிரித்து, அக்கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக போட்டியிடுபவர்களை தோற்கடிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இப்படி, 'சீட்' கிடைக்காமல் சுயேட்சையாக நிற்பவர்களைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தி.மு.க., பேரூராட்சி துணை செயலாளர் தம்பி என்கிற இளங்கோவன், ஒரு படி கீழே இறங்கி விட்டார்.

அவர், தி.மு.க.,வில் பதவி வகிக்கும் நிலையில், அவரது மகன் ரஞ்சித்குமார் பிஜேபி, இளைஞரணியில் சேர்ந்துள்ளார். அது மட்டுமின்றி, இளங்கோவன் தி.மு.க., சார்பில் 10வது வார்டில் போட்டியிடும் நிலையில், 8வது வார்டில் மருமகள் அபிநயாவை சுயேட்சையாக களம் இறக்கி, தி.மு.க., வேட்பாளர் புஸ்ராவின் ஓட்டுகளுக்கு'வேட்டு' வைத்துள்ளார்.

ஓட்டுப் பிரிப்பு

தனக்கு 'சீட்' கிடைத்த பிறகும், பக்கத்துக்கு வார்டில் தனது சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக, மருமகளை சுயேட்சையாக நிறுத்தி பிரசாரம் செய்து ஓட்டை பிரிக்கும் தி.மு.க., பிரதிநிதியை, கட்சித் தலைமை என்ன செய்யப் போகிறது என்பது தான், அக்கட்சியினரின் கேள்வியாக உள்ளது.

மேலும் படிக்க...

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்- காற்றில் கரைந்த இந்திய இசைக்குயில்!

உடல் எடைக் கூடினால் சம்பளம் கட்!

English Summary: Father DMK, - Son BJP, Daughter Independent - Beating Election Comedy!
Published on: 11 February 2022, 04:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now