News

Wednesday, 13 October 2021 08:53 AM , by: R. Balakrishnan

2-year-old child to be vaccinated

நாடு முழுவதும் 2 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசிகள்

இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்  (Vaccine) பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 95.89 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

சில நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த துவங்கியுள்ள நிலையில், இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை அளவில் இருந்து வந்தன. இதற்காக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி செலுத்தி வல்லுநர்கள் குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தன.

குழந்தைகளுக்கு தடுப்பூசி

இதனையடுத்து, கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த வல்லுநர் குழு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையமும் 2 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திட அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 நாட்கள் இடைவெளியில் இரு டோஸ்கள் (2 Dose) கொண்ட குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் வெளியிடவில்லை.

மேலும் படிக்க

பருவ கால தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது தேங்காய்ப்பூ

கொரோனா சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும்: இங்கிலாந்து வல்லுநர் கணிப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)