மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 October, 2019 2:32 PM IST

இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏலக்காய் ஏற்றுமதியினை மீண்டும் துவங்குவதற்கு ஸ்பைசஸ் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏலக்காய் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் ஏலக்காய் சாகுபடியில் தென் மாநிலங்களான தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டுமே நடைபெறுகிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 80 சதவீதத்தை கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சாகுபடி செய்கின்றனர். இம்மாவட்டத்தில் மட்டும் 27 ஆயிரம் எக்டேர் அதிகமான நிலபரப்பில் சாகுபடி செய்து வருகின்றனர்.

சர்வதேச சந்தையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய்க்கு நல்ல மவுசு இருந்தது வருகிறது. இதன் மணம் மற்றும் சுவை பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர்வாக இருந்தததால் ஏலக்காய் ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தது வந்தது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளான குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்தது. இதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்து வந்தது.

கடந்த ஆண்டு துவக்கம் முதலே இறக்குமதி செய்ய வளைகுடா நாடுகள்  தடை விதித்தது. ஏற்றுமதி செய்யப்பட்ட ஏலக்காயில் நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் பயன் படுத்தப்பட்டிருப்பதால் வாங்க மறுத்த விட்டன.  இதன் காரணமாக அந்நியச்செலாவணி குறைந்ததுடன் விவசாயிகளும் கடுமையாக பாதிப்படைந்தனர்.

தற்போது ஏலக்காய் கிலோவிற்கு ரூ. 3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் ஏற்றுமதிக்கான அனுமதி கிடைத்தால், இந்திய ஏலக்காய்க்கு இன்னமும் விலை கூடுதலாக கிடைக்கும். ஏலக்காய் சாகுபடி மற்றும் வர்த்தகத்தை கவனித்து வரும் ஸ்பைசஸ் வாரியம், வளைகுடா நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஏலக்காய் ஏற்றுமதிக்கு அனுமதி பெற்று தர வேண்டும் என விவசாயிகள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: FFarmers are requested Spices Board of India to allow Cardamom Export
Published on: 14 October 2019, 02:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now