சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 30 May, 2021 8:43 AM IST
Credit : Vivasayam
Credit : Vivasayam

இந்தியாவில் பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளை ஊக்குவிக்கும் வகையில் கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 4.5 மெட்ரிக் டன் 'கிராம அரிசியை' உதயா வேளாண் பண்ணை என்ற புதுமை நிறுவனம் விமானம் மற்றும் கப்பல் வழியாக கானாவிற்கும், ஏமனுக்கும் இன்று ஏற்றுமதி செய்தது.

கிராமத்து அரிசி ஏற்றுமதி

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூரில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கப்படும் கிராம அரிசியில் புரதம், நார் மற்றும் ஏராளமான தாதுக்கள் நிறைந்துள்ளன. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடா, வரும் மாதங்களில் இந்த அரிசியின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான உதவிகளை உதயா வேளாண் பண்ணைக்கு அளித்து வருகிறது.

2021-21 ஆம் ஆண்டில் பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க உயர்வை எட்டியது. 2020 ஏப்ரல்-மார்ச் மாதத்தில் ரூ. 14,400 கோடியாக இருந்த ஏற்றுமதி, 2021 ஏப்ரல்-மார்ச் மாதத்தில் ரூ. 35,448 கோடியாக அதிகரித்து, 146% வளர்ச்சியை அடைந்தது.

முன்னதாக இம்மாதத் துவக்கத்தில் ஒடிசா மாநிலத்தின் பாரதீப் சர்வதேச சரக்கு முனையத்திலிருந்து வியட்நாமிற்கு முதல் முறையாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் அசாமில் இருந்து முதல் முறையாக சிகப்பு அரிசி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. எந்தவிதமான ரசாயன உரங்களின் பயன்பாடும் இல்லாமல் அசாமின் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் இரும்பு சக்தி மிகுந்த சிகப்பு அரிசி விளைவிக்கப்படுகிறது.

இந்தியாவின் பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள், தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுடன் அபெடா இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

கோவை மற்றும் நெல்லையில் உரக்கடைகள் திறக்க அனுமதி!!

PM Kisan: ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்தால் ரூ.4000 கிடைக்கும்!! விவரம் உள்ளே!!

 

English Summary: Fibre and protein rice ‘village rice’ from Tamil Nadu exported to Ghana and Yemen
Published on: 30 May 2021, 07:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now