நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 September, 2022 3:19 PM IST
Finance Minister is furious that there is no Modi banner in ration shops

நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசியில் மத்திய அரசுக்கும், மாநிலத்துக்கும் என்ன பங்கு என்று காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீல் பதில் அளிக்க முடியாத நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமையன்று அவரை குற்றம்சாட்டினார்.

பாஜகவின் லோக்சபா பிரவாஸ் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக ஜஹீராபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சீதாராமன், பீர்கூரில் உள்ள கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் ஏன் காணவில்லை என்று கலெக்டர் ஜிதேஷ் பாட்டீலிடம் கேட்டார். மாநிலத்தில் 1 ரூபாய்க்கு மானிய அரிசி பயனாளிகளுக்கு விற்கப்படுகிறது.

"வெளிச்சந்தையில் 35 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசி இங்கு ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு எவ்வளவு செலவு செய்கிறது? என்று கலெக்டரிடம் கேட்டார்.

தளவாடங்கள் மற்றும் சேமிப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தாங்கி PDS கடைகளில் மத்திய அரசு அரிசியை வழங்குகிறது, மேலும் அந்த இலவச அரிசி மக்களைச் சென்றடைகிறதா இல்லையா என்ற பதிலைப் பெற முயற்சிப்பதாக அவர் கூறினார்.

மேலும் சீதாராமன் கூறுகையில், தோராயமாக, மத்திய அரசு 30 ரூபாயையும், மாநில அரசு 4 ரூபாயையும், பயனாளிகளிடமிருந்து 1 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மார்ச்-ஏப்ரல் 2020 முதல், மாநில அரசு மற்றும் பயனாளிகள் எதுவும் பங்களிக்காமல், ரூ.30யிலிருந்து ரூ.35 விலையில் அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

ஆட்சியர் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் போனதால், அடுத்த 30 நிமிடத்தில் பதில் சொல்லும்படி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

தெலுங்கானாவில் உள்ள நியாய விலைக் கடைகளில் பிரதமரின் படங்களையும் வைக்க வேண்டும் என்று முன்பு கோரிக்கை வைக்கப்பட்டபோது, ​​அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். படங்களை வைக்க முன் வந்த பாஜகவினரும் அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

“நான் இன்று சொல்கிறேன். நம்மவர்கள் வந்து இங்கு பிரதமரின் பேனரை வைப்பார்கள். அதை அகற்றாமல் இருக்க மாவட்ட நிர்வாகியாக நீங்கள் உறுதியளிக்க வேண்டும். கிழிந்து விடக்கூடாது என்று கலெக்டரை எச்சரித்தார்.

மத்திய அரசின் பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், இலவசமாக வழங்கப்படும் 5 கிலோ உணவு தானியங்களுக்கான முழுச் செலவையும் மோடி அரசே ஏற்கிறது என்று மத்திய அமைச்சர் கூறினார்.

“NFSA இன் கீழ், உணவு தானியங்களின் விலையில் 80% க்கும் அதிகமானவை மோடி அரசால் ஏற்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் போஸ்டர்/பேனர் காட்டப்படுவதில் ஆட்சேபனை உள்ளதா? ஸ்ரீமதி @nsitharaman,” என்று அவரது அலுவலக ட்வீட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்தார்.

அவரது இந்த செயலை பலர் சமூக வலைத்தடங்களில் வீடியோ மற்றும் பதிவிகள் மூலம் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்க:

"தேனீ வளர்ப்பு" குறித்து TNAU ஒரு நாள் பயிற்சி: விவரம் உள்ளே!

இளநிலை பட்டம் போதும்: மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கான வேலைவாய்ப்பு!

English Summary: Finance Minister is furious that there is no Modi banner in ration shops
Published on: 03 September 2022, 02:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now