மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 July, 2023 3:06 PM IST
Finger Print compulsory for Kalaingnar Magalir Urimai Thittam

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த தருவாயில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையான திட்டமாக கருதப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குதல் வருகிற செப்டம்பர் 15-ஆம் நாளன்று தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து நியாய விலை கடைகளிலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற குடும்பத் தலைவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும்போது பயனாளர்களின் கைவிரல் ரேகையினை பதிவு செய்வது கட்டாயம் என தமிழ்நாடு அரசின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 17 ஆம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்யத் துணை ஆணையர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

பயோமெட்ரிக் ஸ்கேனர் வழங்குவதற்கான வழிமுறைகளை உத்தரவு நகலுடன் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

  • "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" கீழ் விண்ணப்பங்களை பெறும் முகாம்களின் போது e-KYC அங்கீகாரத்திற்காக அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கைரேகை ரீடர்கள் தேவைப்படும்.
  • துணை ஆணையர்கள் (வடக்கு மற்றும் தெற்கு)/ மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் நியாய விலைக் கடையில் தேவையான அளவு பயோமெட்ரிக் சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • போதுமான அளவு கைரேகை ரீடர்கள் சேகரிக்கப்பட்டு, 17 ஜூலை 2023 அன்று அல்லது அதற்கு முன் வேலை செய்யும் நிலையில் அந்தந்த நியாயவிலை கடைகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு கைரேகை ரீடருக்கும் அதற்கான ஒரு வரிசை எண் (ஐடி) உள்ளது. எனவே பயனாளிகளின் பட்டியலை கடை குறியீடு மற்றும் கைரேகை ரீடரின் தொடர்புடைய வரிசை எண்ணுடன் தயார் செய்து, அது மீண்டும் அதே கடைக்கு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.

நியாய விலைக் கடைகளுக்கு தேவையான எண்ணிக்கையிலான கைரேகை ரீடர்களை ஏற்பாடு செய்வதற்கு துணை ஆணையர்கள் (வடக்கு மற்றும் தெற்கு)/ மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் தான் பொறுப்பு.

கணக்கெடுப்பு மற்றும் சிறப்பு முகாம்கள் நிறைவு செய்யப்பட்ட பின் நியாய விலைக் கடை சாதனங்கள் தொடர்பான அடையாள எண்கள் மற்றும் கடைக் குறியீடுகளின் விவரங்களைப் பராமரிக்க, DC/DSO அலுவலகத்தால் தனிப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

துணை ஆணையர்கள் (வடக்கு மற்றும் தெற்கு) / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் பயோமெட்ரிக் ஸ்கேனர்களின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், அது வேலை செய்யும் நிலையில் திரும்பும் வகையில் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

Central Bank of India: 1000 மேனேஜர் காலி பணியிடம்- விண்ணப்பிக்கும் முறை?

ஏரியா மாறிய மழை- 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

English Summary: Finger Print compulsory for Kalaingnar Magalir Urimai Thittam
Published on: 12 July 2023, 03:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now