News

Tuesday, 11 October 2022 12:57 PM , by: T. Vigneshwaran

Diwali 2022

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்று காலை முதலே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவதால் அதிக ஒலியும், காற்று அதிக அளவில் மாசுபடுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டிலும் பட்டாசு வெடிப்பதற்கு நேரத்தை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என்றும், சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க:

Business Ideas: வீட்டில் இருந்தே ரூ. 25000 வரை சம்பாதிக்கலாம்

பெண் குழந்தைகளுக்கு 1,50,000 ரூபாய் கிடைக்கும், இன்றே பெறவும்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)