மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 December, 2020 6:41 PM IST
Credit :New indiaexpress.com

கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியம் வழங்கும் புதிய திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாக புதுச்சேரி அரசு அறிமுகம் செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நேரத்தில், புதுச்சேரி அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

நெற் பயிருக்கு மானியம்

நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு சாகுபடிக்கு பின் மானியமாக ரூ.5,000 புதுச்சேரி அரசு வழங்கிவந்த நிலையில் இதனை சாகுபடிக்கு முன் உதவித்தொகையை மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பயிா் உற்பத்தித்தொகைத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் 2 பருவத்துக்கு மொத்தமாக ரூ.10,000 வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை மற்ற பயிா்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய வேளாண்துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், முதல் கட்டமாக கரும்புப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு இதற்கான தொகையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.

1.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட விநோதமான ஆடு! அசர வைக்கும் வசீகரம்!

கரும்புக்கு 10,000 மானியம்

கரும்புக்கு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியமாக வழங்கும் திட்டம், நடப்பு ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரியில் 1,700 ஏக்கரில் பயிரிடப்படும் கரும்புக்கு ரூ.1 கோடியே 70 ல ட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் கரும்பு விவசாயம் செய்யும் 839 விவசாயிகள் பயனடைகின்றனர்.

 

இது குறித்து அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் கூறுகையில், கரும்பு சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ .40,000 முதல் 50,000 வரை செலவு ஏற்படும் இந்த செலவுகளில் நான்கில் ஒரு பங்கை இந்த மானியம் ஈடுசெய்யும், இதனால் விவசாயிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு கரும்பு பயிர்களை பயிரிட முடியும் என்றார். 

சமையல் சிலிண்டர் விலை 15 நாட்களில் ரூ.100 உயர்வு- அதிருப்தியில் இல்லத்தரசிகள்!

English Summary: First Time in India Puducherry government launches new scheme providing subsidy of Rs 10,000 per acre to sugarcane growers
Published on: 16 December 2020, 12:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now