மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 March, 2023 6:23 PM IST
Fisheries Minister was answering an question raised by kanimozhi MP

ஒன்றிய மீன்வளத்துறை சார்பில் தமிழக மீனவர்களின் நலனுக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்கிற தமிழக எம்.பிக்களின் கேள்விகளுக்கு ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் என்.வி.என்.சோமு கேள்விகள் எழுப்பியிருந்தனர். இவர்களின் கேள்விகளுக்கு ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பதிலளித்தது மட்டுமில்லாமல் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படும் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா, நிதி உதவி (Pradhan Mantri Matsya Sampada Yojana) உட்பட உள்கட்டமைப்பு திட்டங்கள், அடையாள அட்டை வழங்குதல் ஆகியவற்றை பற்றியும் விளக்கமாக பட்டியலிட்டார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தின் மீன்வள மேம்பாட்டுக்காக ரூ.897.55 கோடி மதிப்பிலான திட்டப் பரிந்துரைகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

2021-22 காலக்கட்டம் வரையிலான 5 ஆண்டுகளில் மீனவர் நலன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ஒன்றிய அரசின் பங்கான ரூ.252.74 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ரூபாலா கூறினார். மேலும், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், தமிழகத்திற்கு நிதி வழங்குவதற்காக, 1,091.28 கோடி ரூபாய் மதிப்பிலான மீன்வள உள்கட்டமைப்பு திட்ட (infrastructural project proposals) முன்மொழிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவைப் பெற மீனவர்களுக்கு உதவும் வகையில் தனித்துவமான மீனவர் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கனிமொழி எம்பி எழுப்பிய கேள்விக்கு, கிட்டத்தட்ட 19.16 லட்சம் மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், 12.40 லட்சம் மீனவர்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிக்காக QR-குறியிடப்பட்ட PVC ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா குறிப்பிட்டார்.

இதுத்தவிர மீனவர் நலனுக்காக வகுக்கப்பட்ட பல திட்டங்கள் குறித்தும் அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். இதில் நீலப் புரட்சி ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை (Blue Revolution Integrated Development and Management of Fisheries) மற்றும் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்குதல் மற்றும் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PM MSY) ஆகியவை அடங்கும்.

மீனவர்களுக்கு வலைகள், சங்கிலி வசதிகள், தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு சாதனங்கள், சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் வகையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கான காப்பீடு ஆகியவற்றை வழங்குகிறது எனவும் திட்டத்தை பற்றி எடுத்துரைத்தார்.

மீனவர்களுக்கான திறன் பயிற்சி, மதிப்பு கூட்டப்பட்ட சந்தைப் பொருட்களை உருவாக்குதல் மற்றும் மீன்பிடித் தொழிலுக்கான சமீபத்திய கேஜெட்டுகள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்த கனிமொழி எம்பியின் மற்றொரு கேள்விக்கு, மீனவர்களின் திறன் மேம்பாட்டிற்காக ஒன்றிய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் பதிலளித்தார்.

மேலும் காண்க:

ஏறுன வேகத்தில் இறங்கிய தங்கத்தின் விலை- பொதுமக்கள் நிம்மதி

தமிழக அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெற யாரெல்லாம் தகுதி?

English Summary: Fisheries Minister was answering an question raised by kanimozhi MP
Published on: 28 March 2023, 06:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now