மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 April, 2019 5:37 PM IST

ஆழ்கடலில் வசிக்கும் மீன்களின்  இனப்பெருக்கத்திற்கு எதுவாக இருக்க 60 நாட்கள் வரை விசை படகுகள்  கடலுக்குள் செல்ல அரசு தடை விதிக்கும். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இத்தடை உத்தரவானது 45 நாட்களாக இருந்து 60 நாட்களாக அதிகரிக்க பட்டுள்ளது. மீனின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் 15 முதல்  ஜூன் 15 வரை, 60 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல அரசு தடை விதித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த தடை உத்தரவு சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 13 மீனவ மாவட்டங்களுக்கு பொருந்தும்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துகுடி, தஞ்சை, குளச்சல் , நீலாங்கரை வரை உள்ள கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மாவட்டங்களை சேர்ந்த 5000 அதிகமான விசை படகுகள் நங்குரமிட்டு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீன் பிடிக்க உதவும் உபகரணங்களுடன் கரை நோக்கி, வாழ்வாதாரத்தை தேடி மீனவர்கள் செல்ல தொடங்கி விட்டனர். சிலர் வாழ்வாதாரத்துக்கு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்ல தயாராகி வருகின்றனர்.

பல கோடி அந்நிய செலவாணி ஈட்டு தரும் இத்தொழிலை நம்பி 4 லட்சத்திற்க்கும் அதிகமான மீனவர்களும், 10  லட்சத்திற்க்கும் அதிகமான மறைமுக தொழிலார்களும் பாதிக்க படுகின்றனர். மீனவர்களின் தற்போதைய கோரிக்கையாக தடை காலத்தில் வழங்கும் மானியத்தை 5000 முதல் 10000 வரை உயர்த்தி தர வேண்டும். மேலும் இலங்கை மீனவ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். நெய்தல் நில மக்களின் கோரிக்கை அரசு செவி மடுக்கும்  என நம்புவோம்.

English Summary: Fishing ban in East cost , more than 18 districts suffered
Published on: 15 April 2019, 05:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now