மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 June, 2021 7:41 PM IST
Credit : Daily Thandhi

தமிழகத்தின் 16வது சட்டசபையின் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 21) கவர்னர் உரையுடன் துவங்கியது. அதில், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழு குறித்த தகவல்களே இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பொருளாதாரம் (Economics) மற்றும் நிதிநிலை மோசமான நிலையில் இருப்பதால், இந்த குழுவின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. அதற்கு மற்றொரு காரணம், இதில் இடம்பெற்றுள்ள 5 பேர் தான். யார் அவர்கள்? அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்து மேலும் பார்க்கலாம்.

ரகுராம் ராஜன்

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, இந்திய நிதியியல் சேவைத் துறையில் பல புதுமைகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான முக்கியத்துவம் எனப் பல முக்கியப் பணிகளைச் செய்துள்ளார்.

எஸ்தர் டப்லோ

பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியின் மனைவியும், அவருடன் இணைந்து நோபல் பரிசு (Nobel Prize) வென்றவருமான எஸ்தர் டப்லோ, புதிய பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். உலக நாடுகளில் இருக்கும் வறுமையைத் தீர்க்கும் வழிகளைக் கண்டறிந்ததற்கு நோபல் பரிசு பெற்றுள்ளதால், தமிழகத்தின் வறுமையை ஒழிக்க இவரின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த் சுப்பிரமணியன்

மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போது தமிழக அரசு உருவாக்கியுள்ள புதிய பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பணியாற்றிய அனுபவம் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேலும் உயர்த்த உதவும் என கருதப்படுகிறது.

ஜீன் ட்ரெஸ்

இந்தியாவில் சமூக நலத்திற்காகவும், பாலின சமத்துவமின்மைக்கு எதிராகவும் பணியாற்றி வரும் ஜீன் ட்ரெஸ், பெல்ஜியம் நாட்டில் பிறந்தவராவார். இவர் அமர்தியா சென், ஆன்கஸ் டியாடன் போன்ற நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் உடன் பணியாற்றியுள்ளார். மேலும், தற்போது டில்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

எஸ்.நாராயணன்

மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் எஸ். நாராயணன் சுமார் 40 வருடங்களாக மத்திய, மாநில அரசுகளுடன் பணியாற்றி வருகிறார். 2003 முதல் 2004 வரையில் இந்தியப் பிரதமருக்குப் பொருளாதார ஆலோசகராக (economic advisor) இருந்தார். இதுமட்டும் அல்லாமல் நிதியமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை, விவசாயம், பெட்ரோலியம் என 30க்கும் மேற்பட்டத் துறையில் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தும் பணியில் பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: தஞ்சை கலெக்டர் பேட்டி

புதிய வசதியை அறிமுகம் செய்தது வருங்கால வைப்பு நிதியகம்! 

English Summary: Five members of the Economic Advisory Committee of the Government of Tamil Nadu!
Published on: 21 June 2021, 07:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now