News

Thursday, 08 October 2020 11:13 AM , by: Elavarse Sivakumar

நாமக்கல்லில் நிலவும் தட்பவெப்பநிலை மாற்றத்தால் கோழிப் பண்ணைகளில் ஈக்களின் பெருக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

  • எதிர்வரும் நாட்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • ஒரு சில இடங்களில் லேசான மழையை காற்று மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் தென் மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

  • வெப்பநிலை அதிகமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 71.6 டிகிரியாகவும் இருக்கும்.

  • சமீபகாலமாக மழை விட்டுவிட்டு பெய்வதால், ஈக்களின் இனப்பெருக்கத்துக்கு சாதகமான தட்ப வெப்பநிலை காணப்படுகிறது.

  • இதனால், கோழிப்பண்ணைகளில் ஈக்களின் தொல்லை அதிகமாகி வருகிறது.

  • அவற்றை கண்காணித்து அதற்கு ஏற்ப கட்டுப்படுத்துதல் முறைகளை கையாள வேண்டியது அவசியம்.

  • ஈக்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்க வெள்ளைத் தளை(Paper) ஒரு அட்டையில் குண்டுசியால் நான்கு மூலையிலும் கத்தி கோழிப்பண்ணையில் 24 மணி நேரம் இருக்கும் வகையில் வைத்துவிட வேண்டும்.

  • அடுத்த நாள் அந்த அட்டைகளை சேர்த்து அதில் காணப்படும் புள்ளிகளை (ஈக்கள் எச்சில்) எண்ணினால் தோராயமான ஈக்களின் எண்ணிக்கையைக் கண்டு கொள்ளலாம்.

  • 100-க்கும் மேல் புள்ளிகள் காணப்பட்டால், ஈக்கட்டுப்பாடு முறைகளை உடனடியாகக் கையாளவேண்டும்.

  • இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...

தேங்காய் மற்றும் கொப்பரைக்கு இந்த ஆண்டு குறைந்தபட்சம் என்ன விலை கிடைக்கும்? TNAUவின் கணிப்பு!

உச்சி முதல் பாதம் வரை- எக்கச்சக்க பலன் தரும் மருத்துவ மூலிகை கிராம்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)