மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 November, 2020 2:00 PM IST
Credit : LBB

தீபாவளிப் பண்டிகை வருவதையொட்டி, பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 240 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ (Jasmine) விலை 5 மடங்கு அதிகரித்து 1400 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 200 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ 1200 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி பூ 500 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்பனையான சம்மங்கி பூ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

5 மடங்கு விலை உயர்வு:

தீபாவளிப் பண்டிகை (Deepavali) நெருங்கும் நிலையில், மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் (Flower market) பூக்கள் விலை 5 மடங்கு உயர்ந்துள்ளது. மலர் சந்தைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் பூக்கள் விற்பனைக்காக (Sales) கொண்டுவரப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு மொத்த மற்றும் சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர் மழை (Continuous rain) காரணமாக பூக்கள் வரத்து வழக்கத்தை விட குறைவாக உள்ளதாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாகவும் பூக்களின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் 5 மடங்கு விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக 80 முதல் 90 டன் வரை பூக்கள் வரத்து இருந்து வரும் நிலையில் தற்பொழுது பூக்கள் வரத்து 50 டன் மட்டுமே வருகிறது.

பூக்கள் விலை:

400 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் பூ 1500 ரூபாய்க்கும், கோழிகொண்டை பூ 80 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 250 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 150 ரூபாய்க்கும், கேந்தி பூ 100 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. பூக்களின் வரத்து குறைந்து வரும் நிலையில், தேவை அதிகரிப்பதன் காரணமாக நாளை இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் (Merchants) தெரிவிக்கின்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தீபாவளி ஸ்பெஷல்!பானை செய்யும் தொழிலாளி கண்டுபிடித்த மேஜிக் விளக்கு! குவியும் ஆர்டர்கள்!

தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டுமென, மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

English Summary: Flower prices go up in Madurai ahead of Deepavali
Published on: 13 November 2020, 02:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now