மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 November, 2020 8:18 PM IST
Credit : Sarangi

நிவர் புயலால், தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் இழப்பீடு வேண்டி அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், பூ விவசாயமும் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் (Flowers) வரத்து குறைந்ததால் விலை மூன்று மடங்கு உயர்ந்து ஒரு முழம் மல்லிகை ரூ.100 வரை விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிவர் புயலால் (Nivar Cyclone) கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் தோட்டக்கலை (Horticulture) பயிர் செய்து வந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

பூக்களின் வரத்து குறைவு:

காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டுக்கு (Flower Market) சுற்றுவட்டார பகுதிகளான ஊத்துக்காடு, சிறுவாக்கம், புரிசை மட்டுமல்லாது, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து மலர்கள் விற்னைக்கு வரும். ஆனால் கடந்த 3 நாட்களாக நிலத்தில் நீர் வற்றாததால் காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்தது. இதனால் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டில் 1 முழம் மல்லிகை பூ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நேற்று திருக்கார்த்திகை தீபம் என்பதால் பூ மார்க்கெட்டில் மல்லி விலை கிலோ ரூ.1,500க்கும், கனகாம்பரம் ரூ.1,000ம், சாமந்தி ரூ.250க்கும் விற்பனையானதால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மீண்டும் விலை உயர்வு:

நடப்பாண்டில் கடந்த ஆயுத பூஜை மற்றும் தீபாவளி அன்றும் பூக்களின் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதைப் போலவே பூக்களின் விலை உயர்வு, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், பூக்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. நிவர் புயலால், பூ வரத்து குறைந்ததால் தான் இந்த விலையேற்றம் என பூ வியாபாரிகள் (Florists) தெரிவித்தனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய விவசாயம்!

English Summary: Flowers less due to Nivar storm! Farmers happy with price hike!
Published on: 30 November 2020, 08:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now