இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 December, 2021 2:35 PM IST
Flowers prices goes up

தொடரும் பனிப்பொழி எதிரொலியால், கோயம்பேடு பூ சந்தையில், பூக்கள் விலை உயர்ந்துள்ளது.கோயம்பேடு சந்தைக்கு, திருவள்ளூர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, நிலக்கோட்டை, ஊட்டி, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், கடந்த மாதம் பெய்த மழை மற்றும் தொடரும் பனிப்பொழிவு காரணமாக, பூக்களின் (Flowers) விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

பூக்கள் விலை உயர்வு (Flowers Price Raised)

கோயம்பேடு சந்தையில், தினமும் 100 லாரி பூக்கள் வந்த இடத்தில், தற்போது 30 முதல் 35 லாரி பூக்கள் மட்டுமே வருகின்றன. நிலக்கோட்டை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 'ஐஸ்' பெட்டியில் மல்லிகை பூ (Jasmine) வரத்து உள்ளது. சபரிமலை சீசன் மற்றும் மார்கழி மாத பிறப்பு உள்ளிட்ட காரணங்களால், கோவில் பூஜைகளுக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு மற்றும் வரத்து குறைவால், பூக்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு பூ சந்தையில், நேற்று 1 கிலோ மல்லிகை பூ- 2,000 - 2,500 ரூபாய்க்கு விற்பனையானது. முல்லை பூ- 1,500 - 1,800; கனகாம்பரம் 700 - 800; ஜாதி மல்லி 450 - 600, ரோஜா 150 - 180 ரூபாய்க்கு விற்பனையானது.

மேலும் படிக்க

கோயம்பேடு சந்தையில் இடமளித்தும் தக்காளி விலை குறையாதது ஏன்? - உயர்நீதிமன்றம்

தேங்கி நிற்கும் மழைநீரால் 2 ஆயிரம் வாழைகள் நாசம்!

English Summary: Flowers prices go up due to continuous snowfall
Published on: 19 December 2021, 02:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now