மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 September, 2022 10:25 AM IST

காய்ச்சல் அதிகரித்து வருவதன் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு புதுச்சேரி மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களால் ஃப்ளு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சளி, இருமலுடன்கூடிய இநத காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிதது வருவது அதிர்ச்சி தகவல் என்றாவ், இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் பள்ளி சிறார்கள் என்பது நமக்கு அதிர்ச்சி தரக்கூடியத் தகவல்.

10 நாட்களாக

குறிப்பாக தலைநகர் சென்னையில் ஃப்ளூ காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேபோன்று, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் ப்ளு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் காரணமாக வருவோரின் எண்ணிக்கை, கடந்த 10 நாட்களாக அதிரடியாக அதிகரித்து வருகிறது. அவ்வாறு, காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருபவர்களில் 50% மேற்பட்டவர்கள் சிறுவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை

இதனையடுத்து, மாணவர்களின் நலன் கருதி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை பரிந்துரைந்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விரைவில் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா

கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் முழுவீச்சில் இயங்காத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல்தான் பள்ளிகள் சரிவர செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஃப்ளு காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

மேலும் படிக்க...

துப்புரவு பணியாளரை காதலித்து கரம் பிடித்த பெண் டாக்டர்!

ராஜினாமா செய்பவர்களுக்கு 10% சம்பள உயர்வு!

English Summary: Flu fever echo: Holidays for schools?
Published on: 17 September 2022, 10:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now