அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 February, 2023 2:16 PM IST
For 33% affected paddy crops per hectare Rs. 20,000 compensation Chief Minister notification

டெல்டா மாவட்டங்களில் பருவமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வெள்ளத்தில் மூழ்கியதைக் குறிப்பிட்டு, ஸ்டாலின் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிவிப்பில், மாநில வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் சேதங்களை மாநில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார். கள ஆய்வின் போது அமைச்சர்களுடன் கலந்து கொண்டு, விவசாயிகளின் கருத்துகளை கேட்க வேளாண் துறை செயலாளர், வேளாண் இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினேன்'' என்றார்.

பிப்ரவரி 6, திங்கட்கிழமை தூதுக்குழுவினரிடம் இருந்து பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பெற்று, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான தொடர் நடவடிக்கை தொடங்கப்படும் என்றும், பருவமழை குறைந்துள்ளதாகவும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் முதலமைச்சர் மேலும் கூறினார். நெல் வயல்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே களத்தில் இறங்கிய மாநில வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகள் வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். மேலும், அந்த கடிதத்தில் மழையால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்திடும் வகையில், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சியடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரை தளர்த்தவும், தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையொட்டி இன்று  33% பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 இழப்பீடு வழங்கப்படுவதாக  முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

பருவமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இழப்பீடாக பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படுவதாகவும், நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும் எனவும், டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மின் கட்டணம் நிச்சயம் குறையும் - செந்தில் பாலாஜி

சின்ன வெங்காயம்‌ விலை குறைய வாய்ப்பு! TNAU தகவல்

 

English Summary: For 33% affected paddy crops per hectare Rs. 20,000 compensation Chief Minister notification
Published on: 06 February 2023, 12:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now