News

Tuesday, 23 August 2022 06:14 AM , by: R. Balakrishnan

Agriculture

விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து ஆராய கடந்த மாதம் 18-ந் தேதி மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. முன்னாள் விவசாய செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையிலான இக்குழுவில் 26 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தநிலையில், இக்குழுவின் முதலாவது கூட்டம் நேற்று நடைபெற்றது.

4 துணை குழுக்கள் (4 sub Teams)

40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுக்கு 3 உறுப்பினர்கள் பொறுப்பு ஒதுக்கப்பட்ட போதிலும், உறுப்பினர்களை நியமிக்காத மோர்ச்சா, இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாள் முழுவதும் நடந்த ஆலோசனை கூட்டத்தில், விவசாயிகளின் 3 முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய 4 துணை குழுக்களை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

பல்வகை பயிர்களை பயிரிடுவது, பயிரிடும் முறையில் மாற்றம், குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகவும் வெளிப்படையாக ஆக்குவது ஆகியவை குறித்து முதல் துணை குழு ஆய்வு செய்யும். 2-வது குழு, நுண்நீர் பாசனம் பற்றியும், 3-வது குழு இயற்கை விவசாயம் பற்றியும், 4-வது குழு பல்வகை பயிர்களை பயிரிடுவது பற்றியும் ஆய்வு செய்யும்.

மேலும் படிக்க

விவசாயத்திற்கு தனியாக மின் வழித்தடம்: 1,500 கோடி ரூபாயில் பணிகள் தொடக்கம்!

ஆங்கிலம் தெரியாத விவசாயியை கிண்டலடித்த வங்கி அதிகாரிகளுக்கு கண்டனம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)