டெல்லியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான, ஷீலா தீக்ஷித் (81) அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று மதியம் காலமானார்.
1998லிருந்து 2014 வரை தொடர்ந்து மூன்று முறை டெல்லி முதல்வராக ஆட்சி செய்தார். அவர் வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.
டெல்லியை பொறுத்தவரை ஷீலா தீக்ஷித் அவர்களின் கோட்டை என்று சொல்லும் அளவிற்கு வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் நெருங்க முடியாத அளவிற்கு வலிமையான ஒரு ஆட்சியினை 15 ஆண்டுகள் செய்து வந்தார். டெல்லியின் பெரும் வளர்ச்சிக்கு இவர் முக்கிய பங்காற்றினார் என்றால் அது மிகையாகாது. அவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்.
Anitha Jegadeesan
Krishi Jagran