மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 August, 2019 11:14 AM IST

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றிய சுஷ்மா ஸ்வராஜ் திடீர் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இவரது மறைவு இந்திய அரசியலுக்கும்,  பாஜக - விற்கும் பேரிழப்பாகும். 

சுஷ்மா ஸ்வராஜ் வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு  7 முறை மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். இந்திரா காந்திக்கு பிறகு வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய  இரண்டாவது பெண் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.  பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தின் போதும் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 

பாஜக-வின் முக்கிய தலைவர் என்பதையும் தாண்டி, தேசிய அளவில் அனைவராலும், பிற கட்சியினராலும் நேசிக்கப்பட்ட பெண் தலைவராக திகழ்ந்தார். வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில்  அவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளே பாராட்டும் படி இருந்தன. நாடு கடந்தும் பல்வேறு மக்களால் நேசிக்க பட்டவர்.

டுவிட்டரில் பதிவிடுவது, பொது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது என எப்போதும் சுறுசுறுப்பாக இயக்கும் அவர் இறுதியாக செய்த டுவிட் வலை தளங்களில் பரவலாகிவருகிறது. "நன்றி பிரதமர் மோடி அவர்களே. மிகவும் நன்றி. எனது வாழ்க்கையில் இந்த நாளைத்தான் பார்ப்பதற்கு காத்துக்கொண்டு இருந்தேன்" என்று ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தெரிவித்திருந்தார்.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Former External Affairs Minister Sushma Swaraj Passed Away: Glorious Chapter In Indian Politics Comes To An end – PM Modi
Published on: 07 August 2019, 11:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now