News

Saturday, 24 August 2019 04:07 PM

டெல்லி உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நல குறைவால் இன்று (ஆகஸ்ட் 24, 2019) காலமானார். அவருக்கு வயது 66.

வெகு  நாட்களாகவே  அருண் ஜெட்லிக்கு சர்க்கரை வியாதி இருந்தது வந்தது. இதன் காரணமாக அவரது உடல் எடை அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த 2014-ல் உடல் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சையும் செய்துள்ளார். உடல்நிலை மோசமானதால்  2018, ஆகஸ்ட் முதல்  அமைச்சக பணி, கட்சி  பொறுப்பில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டார். 

அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி மூச்சுத் திணறல் பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவரது உடல் அனுமதிக்கப்பட்ட மறு தினமே மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு இதயம், நரம்பியல் மருத்துவர்களின் குழு தொடர்ந்து கவனித்து வந்தது.

இந்நிலையில்  தொடர்ந்து அருண் ஜெட்லி அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த வந்த  நிலையில் இன்று மதியம் 12:07 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கட்சி தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)