மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 October, 2020 12:10 PM IST
Credit : Dinamalar

மன்னார்குடி அருகே நெல் கொள்முதலில் (Purchase) மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை (Corruption Eradication Department) அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கிடங்கிற்கு கொண்டு சென்ற நெல் மூட்டைகளை மீண்டும் கொண்டு வந்து கொள்முதல் செய்தது போல், கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் (Judges) தெரிவித்து இருந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

அடிப்படை வசதிகள் தேவை:

வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தாக்கல் செய்த பொது நல மனுவில் (Public Welfare Petition) தஞ்சாவூர், திருச்சி, நாகபட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகள் நெல் அறுவடை (Harvest) செய்கின்றனர். அறுவடை செய்த விளைபொருட்களை அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விற்பனை செய்ய பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சாலைகளில் பல மணி நேரம் வெயில், மழையில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உணவு, குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என அவர் குற்றம் சட்டி இருந்தார். மேலும் விவசாயிகளுக்கு உணவு, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் (Basic facilities) செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் (SuryaPrakasam) அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

Credit: Dinakaran

நீதிபதிகள் விசாரணை:

பொதுநல மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள், விவசாயிகள் இரவு, பகல் பாராமல் உழைத்து உணவு உற்பத்தி (Food production) செய்கின்றனர். விளை பொருட்களை சரியான நேரத்தில் அவர்களால் விற்பனை செய்ய முடியவில்லை. மேலும் பல விவசாயிகள் வறுமையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்து இருந்தனர். மேலும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என நீதிபதிகள் தங்களின் ஆதங்கத்தை காட்டமாக கூறினார். இந்தநிலையில் தற்போது திருவாரூர் அருகே நெல் கொள்முதலில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கண்ணாரபேட்டை கொள்முதல் நிலையத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான, 155 நெல் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் ஒரு நெல் மூட்டைக்கு ரூ.40 பெறுவதாக வந்த புகாரில் அடைப்படையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

நோய்த் தாக்கப்பட்ட தென்னை மரங்களை மறுநடவு செய்ய, ஒரு மரத்திற்கு 1000 ரூபாய் மானியம்!

மக்காச்சோளத்தில், படைப்புழுவைக் கட்டுப்படுத்த, ஹெக்டேருக்கு 2000 ரூபாய் மானியம்!

English Summary: Fraud at a paddy procurement center near Mannargudi! Officials who discovered bribery of farmers!
Published on: 16 October 2020, 12:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now