News

Sunday, 28 August 2022 06:22 PM , by: T. Vigneshwaran

Free bus travel scheme for womens

பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் என்பது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் தரக்கூடிய ஒரு செயல்பாடாகத்தான் இருக்கிறது" என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் நடந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "மகளிர் இலவசப் பயணம் அறிவித்த பிறகு, பயணிகளின் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது. மிகவும் குறிப்பாக பெண்களின் பயணம் 40 சதவீதத்திலிருந்து 60, 62 சதவீதத்தைத் தாண்டி, சென்னையில் 69 சதவீதம் என்கிற அளவுக்கு பெண்களின் போக்குவரத்து சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இதன் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வருமானம் கூடுதலாக அமைகின்ற சூழல்தான் ஏற்பட்டிருக்கிறது. எனவே பெண்களுக்கு தமிழக முதல்வர் வழங்கியுள்ள இந்த இலவச பேருந்து பயண திட்டம் என்பது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் தரக்கூடிய ஒரு செயல்பாடாகத்தான் இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க:

Post Office: 10 வயது குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டம், மாதம் ரூ.2,500 கிடைக்கும்

விவசாயிகள் மானியவிலையில் சம்பா பருவ விதை நெல் பெறலாம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)