News

Tuesday, 22 February 2022 06:57 PM , by: T. Vigneshwaran

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

இந்திய மத்திய அரசு விவசாயிகள், பெண்கள் மற்றும் சமூகத்தின் ஏழை பிரிவினருக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இம்மக்களை சுயதொழில் செய்ய ஊக்குவித்து அவர்களை தன்னிறைவு கொண்டவர்களாக மாற்றுவதே இத்திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிலையில், பெண்களை தன்னிறைவுபடுத்தும் வகையில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் 50,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற, பெண்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த திட்டம் ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

PM இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் பலன்கள்

  • பெண்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

  • இத்திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் கூலித் தொழிலாளி பெண்கள் இலவசமாக தையல் இயந்திரங்களைப் பெறலாம்.

  • இத்திட்டத்தின் கீழ், நாட்டின் உழைக்கும் பெண்கள் சுயசார்புடையவர்களாக மாறலாம்.

  • பெண்கள் வீட்டில் இருந்தபடியே தையல் செய்து நல்ல வருமானம் பெறலாம்.

PM இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

பிரதான் மந்திரி இலவச தையல் இயந்திரத் திட்டம் பெண்களைத் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க ஊக்குவிக்கிறது.

PM இலவச தையல் இயந்திரத் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது

  • PM இலவச தையல் இயந்திரத் திட்டத்தில் விண்ணப்பிக்க, பயனாளி அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.india.gov.in/ ஐப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • இந்த இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, தையல் இயந்திரங்களை இலவசமாக வழங்குவதற்கான விண்ணப்பப் படிவம் உங்கள் முன் திறக்கும், அங்கு நீங்கள் விண்ணப்பத்திற்கு தகுதி பெறுவீர்கள்.

  • இதற்குப் பிறகு, விண்ணப்பப் படிவம் PDF வடிவத்தில் திரையில் தோன்றும். பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்.

  • இதற்குப் பிறகு, பெயர், தந்தை / கணவரின் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற தகவல்கள் போன்ற அனைத்து தகவல்களும் நிரப்பப்பட வேண்டும்.

  • அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு, உங்கள் விண்ணப்பப் படிவத்துடன் புகைப்பட நகலை இணைத்து, உங்களின் அனைத்து ஆவணங்களையும் அந்தந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

  • இதற்குப் பிறகு உங்கள் விண்ணப்பப் படிவம் அலுவலக அதிகாரியால் ஆய்வு செய்யப்படும். சரிபார்த்த பிறகு, இந்தத் திட்டத்தின் கீழ் உங்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும்.

மேலும் படிக்க:

LPG விலையில் மற்றம், புதிய விலை இன்று முதல் அமல்படுத்தப்படும்

ஆடு வளர்ப்புக்கு அரசு மானியம் வழங்குகிறது,எவ்வளவு தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)