News

Sunday, 07 May 2023 08:56 AM , by: R. Balakrishnan

Free Smartphone for Differently abled

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேலை வாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்து, நேற்று நடத்தி உள்ளார்.

வேலை வாய்ப்பு முகாம் (Job Fair)

தமிழக அரசு மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு வழிகாட்டும் மையம் மூலமாக வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம் பல ஆயிரக் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெறுகிறார்கள். அரசு துறைகளை தவிர தனியார் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும் முகாம் ஏற்பாடு செய்யப்படும்.

அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பாக 16 தொழில்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இலவச ஸ்மார்ட்போன் (Free smartphone)

நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கர் பிரபு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், 35 மாற்றுத் திறனாளிகளுக்கு 35,500 ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் போன்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

நம்ம ஊரு பூண்டுக்கு இவ்வளவு மவுசா: சீனாவை பின்னுக்குத் தள்ளி ஏற்றுமதியில் முதலிடம்!

இரண்டாகப் பிரியும் TNPSC தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசின் திடீர் முடிவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)