News

Monday, 20 December 2021 12:23 PM , by: Deiva Bindhiya

From today onwards permission granted to bathe in Kutralam falls!

குற்றாலம் அருவியில் குளிக்க காத்திருந்த சுற்றுலா பயணிகளின் காத்திருப்பு காலம் நிறைவடைந்தது, இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை தொடர்ந்து, இதற்காக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி தலைமையில், பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

8 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவி திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல், வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். குற்றாலத்தில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

தென்காசி மாவட்டத்தின், பிரதான சுற்றுலா தளமான குற்றாலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வில் அவ்வப்போது சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தாலும், தொற்று பரவல் காரணமாக மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம் மார்கழி மாதத்திலும், மக்கள் குற்றாலத்தில் குளிக்க குவிந்துள்ளனர். மேலும் இதில் ஐயப்ப பக்தர்கள் பெரும் அளவில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடதக்கது.

குற்றால மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஒரே நேரத்தில் 10 பேரும், பெண்கள் பகுதியில் ஒரு நேரத்தில் 6 பேரையும் அனுமதிக்கின்றனர். ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தலா 10 பேரும், பழைய குற்றாலம் அருவியில் ஆண்கள் பகுதியில் 5 பேரும், பெண்கள் பகுதியில் 10 பேரையும் அனுமதிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும், அதாவது தனிமனித இடைவெளியை கடைபிடித்து நிற்க வரையப்பட்ட வட்டங்களில் நின்று செல்லவேண்டும். மேலும் இங்கு வருவோர் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டியது அவசியம், அருவிப் பகுதிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க:

ரூ.5 ஆக குறைந்த முட்டை விலை! காரணம் என்ன?

ரூ.80 லட்சம் விலை கொண்ட எருமை! பிரபலம் கஜேந்திரா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)