மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 December, 2021 5:24 AM IST
Full time classes

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவர்களை தொடர்ந்து 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர் மழை காரணமாக நவம்பர் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது ஜனவரி 2 ஆம் தேதி வரை, ஒரு வாரம் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுநேர வகுப்புகள் (Full Time Classes)

இந்த நிலையில், விடுமுறை முடிந்து ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது, தற்போது நடைமுறையில் உள்ள சுழற்சிமுறை வகுப்புகளுக்கு பதிலாக வழக்கம்போல் முழுநேர வகுப்புகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய முடிவை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆலோசிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் (CEO) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆலோசனை (Discussion)

வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) சென்னையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிகளை வழக்கம்போல் முழுநேரமும் இயக்குவதில் நிர்வாக ரீதியாக உள்ள சிக்கல்கள், மாணவிகள் மீதான பாலியல் தொல்லை, ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார், நெல்லை பள்ளி கட்டட விபத்து, அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கவுன்சிலிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க

நவீன வசதிகளுடன் தனியார்ப் பள்ளிகளை மிஞ்சும் அரசுப் பள்ளி!

ஆசிரியர்களே இல்லாத பள்ளியில் தானாக கல்வி கற்கும் மாணவர்கள்!

English Summary: Full time classes in Tamil Nadu schools from January 3!
Published on: 26 December 2021, 05:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now