அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 March, 2023 7:09 PM IST
New Business Subsidy

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் படி, தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கூறுகையில், “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பல்வேறு தொழில் வழிகாட்டுதல் மற்றும் தொழில் துவங்க நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 35 வயது வரையிலும், பெண்கள், பின்தங்கிய வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 2.5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் படி, உற்பத்தி சார்ந்த தொழில் துவங்கிட, ரூ.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. சேவை சார்ந்த தொழில்கள் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு வரை படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினருக்கு நகர்புறத்தில் 15 சதவீதம், கிராமப்புறத்தில் 25 சதவீதம், சிறப்பு பிரிவினருக்கு நகர்புறத்தில் 25 சதவீதம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. உற்பத்தி சார்ந்த தொழில் மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்கிட, 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க:

பெண்கள் தொழில் தொடங்க மாநில அரசு வழங்கும் மானியம்

ஒரு கிலோ வெங்காயம் ரூ. 3500க்கு விற்பனை! முழு விவரம்!

English Summary: Funding up to Rs. 50 lakhs to start a new business! How to get!
Published on: 12 March 2023, 07:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now