News

Monday, 13 February 2023 04:36 PM , by: Deiva Bindhiya

G20: 3-day meeting begins today in Indore, a gathering of agricultural giants

இந்தூர்: இந்தியாவின் ஜி 20 தலைமையின் கீழ் முதல் விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தின் (ADM) மூன்று நாள் கூட்டம் திங்கள்கிழமை முதல் இந்தூரில் தொடங்கியது.

G20 நாடுகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். அதில், பலர் இந்தூரில் அமைந்துள்ள ராஜ்வாடா அரண்மனைக்கு சென்று அதன் அழகை ரசித்து வருகின்றனர்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஜி20 மாநாடு கண்காட்சியை துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் சுமார் 29 ஸ்டால்கள் இருக்கும், அதில் 10 ஸ்டால்கள் வேளாண் தொழில்நுட்ப பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது, 11 தினைக்கு அர்ப்பணிக்கப்படும் மற்றும் நான்கு ஸ்டால்கள் விவசாய பொருட்களை காட்சிப்படுத்த மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளம் ஆகியவை ஸ்டாலில் காட்சிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது.

இந்தூரில் விவசாயம் தொடர்பான #G20 மாநாட்டின் முதல் கூட்டத்தில் உரையாற்றினார்: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

இந்தூரில் உள்ள ஷெரட்டன் ஹோட்டலில் #G20 விவசாய மாநாட்டின் முதல் கூட்டத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆற்றிய உரை. "இன்று உலக நாடுகளின் தேவைகளை இந்தியா பூர்த்தி செய்து வருகிறது என்றும், எதிர்காலத்தில் உலக நாடுகளின் உணவுத் தேவையை நாடு பூர்த்தி செய்யும் என்றும்" அவர் கூறினார்.

மாநில வேளாண்மைத் துறையும் மாநிலத்தின் நான்கு முற்போக்கான விவசாயிகளை சர்வதேச விருந்தினர்களுடன் தங்கள் பயணத்தைப் பகிர்ந்து கொள்ள அழைக்கும் போது, மாநிலத்திற்கான கண்காட்சிப் பகுதியில் விவசாயிகளின் கார்னர் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 20 சென்டில் 60,000 ரூபாய் வருமானம் தரும் டிராகன் ஃப்ரூட் சாகுபடி

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்த இந்தூர் ஆட்சியர் இளையராஜா டி, “ஜி20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 89 சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் சில சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பார்கள். விருந்தினர்கள் வரத் தொடங்கியுள்ளனர். கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் தவிர, விருந்தினர்களுக்கு முதல் நாளான இன்று இந்தூரின் பாரம்பரிய காட்ட நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது, சந்திப்பின் இரண்டாவது நாளில் தாரில் உள்ள மாண்டுவிற்கும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் எனத் தற்போதைய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயம், விநியோக மதிப்பு சங்கிலி, இயற்கை விவசாயம் மற்றும் ஸ்மார்ட் விவசாயத்தில் டிஜிட்டல் மயமாக்கலின் சாத்தியக்கூறுகள் மூன்று நாள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

கூட்டத்தின் முதல் நாளில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் ஒரு தொடக்க இரவு விருந்து மாநிலத்தால் நடத்தப்படும்.

கூட்டத்தின் இரண்டாம் நாள் அமர்வில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உரையாற்றுவார்.

G20 விருந்தினர்களுக்கு மத்தியப் பிரதேச அரசின் சுற்றுலா மற்றும் வனத் துறை உள்ளூர் கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கும்.

மாவட்ட நிர்வாகம் ராஜ்வாடா அரண்மனைக்கு பாரம்பரிய நடைப்பயணத்தையும், விருந்தினர்களுக்காக மண்டு கோட்டைக்கு உல்லாசப் பயணத்தையும் திட்டமிட்டுள்ளது. பாரம்பரிய நடைப்பயணத்தின் முடிவில் விருந்தினர்களுக்கு உள்ளூர் இந்தூர் உணவு வழங்கப்படும்.

மேலும் படிக்க:

சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு! முழு விவரம் இங்கே

இந்தியா தலைமையில் ஜி-20 மாநாடு: தினை ஆண்டு 2023

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)