அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 July, 2022 7:02 AM IST
Gas cylinder

ரேஷன் கடைகளில், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை துவக்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது.

காஸ் சிலிண்டர் (Gas Cylinder)

இரு பிரிவுகளிலும் சிலிண்டர் இணைப்பு பெற காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' எண், முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். சிலிண்டர் வேண்டி பதிவு செய்ததும் 'டெலிவரி' செய்யப்படும். வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள், கல்லுாரிகளில் படிப்போர் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால், சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்படுகின்றனர்.

அவர்களின் வசதிக்காக, முக்கிய இடங்களில் உள்ள ஏஜன்சிகளில், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்கப்படுகிறது. அதை வாங்க முகவரி சான்று தேவையில்லை; ஏதேனும் ஒரு அடையாள சான்று வழங்கினால் போதும்.

முதன்முறை சிலிண்டர் வாங்கும்போது மட்டும் 'டிபாசிட்' கட்டணம் செலுத்த வேண்டும். பின், சிலிண்டரில் காஸ் தீர்ந்ததும், மீண்டும் வாங்கும்போது, அம்மாதத்திற்கான காஸ் விலையை வழங்கினால் போதும். பலருக்கு, 5 கிலோ சிலிண்டர் விற்பனை விபரம் தெரியவில்லை. இதையடுத்து, அனைவருக்கும் தெரியும் வகையில், இந்தியன் ஆயிலுடன் இணைந்து, அந்த சிலிண்டரை ரேஷன் கடைகளில் விற்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை நடத்தும் ரேஷன் கடைகளில் விற்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, அத்திட்டம் மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்.

இதுதொடர்பாக, கூட்டுறவுத் துறையின் பொது வினியோக திட்ட இணை பதிவாளர் தேன்மொழி, சங்கங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'கூட்டுறவு ரேஷன் கடைகளில், இந்தியன் ஆயில் நிறுவனம் வகுத்துள்ள பாதுகாப்பு நிபந்தனைக்கு உட்பட்டு, உரிய அலுவலரிடம் உரிமம் பெற்று, 5 கிலோ வணிக சிலிண்டர்களை விற்பனை செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், 'ரேஷன் கடைகளில் உணவு தானியங்களை வைக்கவே இடவசதி இல்லை. 'அதிக ஆபத்து உள்ள சிலிண்டர்களை பாதுகாப்பாக கையாளுவதில் அதிக சிரமம் உள்ளது; எனவே, சிலிண்டர் விற்பனையை துவக்கும் முன், அதற்கான சாதக, பாதகம் குறித்து ஊழியர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்' என்றனர்.

மேலும் படிக்க

வேளாண் கருவிகளை மானியத்தில் பெற உழவன் செயலி பதிவு கட்டாயம்!

ரசாயன உரங்களுக்குப் பதிலாக நானோ உரங்கள்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல் !

English Summary: Gas cylinder in ration shops: cooperative sector action announcement!
Published on: 17 July 2022, 07:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now